சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் சுவாமி ஆசுதோஷானந்தர் அவர்கள் விளக்கியெழுதியுள்ள, “வேத மந்திரங்கள் – மந்திரங்கள், சாந்தி மந்திரங்கள், ஸூக்தங்கள்” என்னும் 2010ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலிலிருந்து.
காயத்ரீ மந்திரம் – ரிக் வேதம் 3.62.10
ஓம் பூர் புவஸ்ஸுவ:
தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத் ஓம்
பிரணவ மந்திரமாகவும், பூ:, புவ:, ஸுவ: என்ற வ்யாஹ்ருதிகளாகவும் இரூகின்ற யார் நமது புத்தியைத் தூண்டுகிறாரோ, அனைத்தையும் படைப்பவரான அந்த தெய்வத்தின் சிறந்த ஒளி வடிவைத் தியானிப்போம்
அப்யாரோஹ மந்திரம் – ப்ரஹதாரண்யக உபனிஷதம் 1.3.28
ஓம் அஸதோமா ஸத்கமய தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய |
(உண்மையற்ற நிலையிலிருந்து என்னை உண்மை நிலைக்கு அழைத்துச் செல்வாயாக ! அறியாமை இருளிலிருந்து என்னை அறிவுப் பேரொளிக்கு அழைத்துச் செல்வாயாக! மரணத்திலிருந்து என்னை மரணமில்லா பெரு நிலைக்கு அழைத்துச் செல்வாயாக!)
மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம் –சுக்லயஜுர்வேத ஸம்ஹிதை 3.60
ஓம் த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்ட்டிவர்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மா(அ)ம்ருதாத் ஓம்
நறுமணம் கமழ்பவரும், உணவூட்டி வளர்ப்பவரும், முக்கண்ணருமாகிய சிவபெருமானை போற்றி வழிபடுகிறோம். வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவதைப் போல் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடுவோமாக! ஆன்ம நிலையிலிருந்து விலகாமல் இருப்போமாக!
சக்தி மந்திரம் – சுக்ல யஜுர்வேதம் 19.9
ஓம் தேஜோஅஸி தேஜோமயி தேஹி | வீர்யமஸி வீர்யம் மயி தேஹி | பலமஸி பலம் மயி தேஹி | ஓஜோஅஸி ஓஜோமயி தேஹி | மந்யுரஸி மன்யும் மயி தேஹி | ஸஹோஸி ஸஹோமயி தேஹி || ஓம்.
(இறைவா, நீ ஆன்மசக்தியாக இருக்கிறாய்,
எனக்கு ஆன்ம சக்தியைத் தருவாய்.
நீ ஒழுக்க சக்தியாக இருக்கிறாய்,
எனக்கு ஒழுக்க சக்தியைத் தருவாய்.
நீ உடல் சக்தியாக இருக்கிறாய்,
எனக்கு உடல் சக்தியைத் தருவாய்.
நீ தெய்வீக சக்தியாக இருக்கிறாய்,
எனக்கு தெய்வீக சக்தியைத் தருவாய்.
நீ தைரியமாக இருக்கிறாய்,
எனக்கு தைரியத்தை தருவாய்.
நீ பொறுமையாக இருக்கிறாய்,
எனக்கு பொறுமையை தருவாய்.)